SELANGOR

2019 செரண்டா பசுமை ஓட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்!

ஷா ஆலம், நவ.18-

2019 செரெண்டா பசுமை ஓட்டத்தில் ஐந்து கென்யா ஓட்டக்காரர்கள் உட்பட 400க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியானது , குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து வராத பலருக்கு செரண்டாவை அறிம்யுகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்தது என்ரு மலேசிய சுற்றுலா துறையின் உள்நாட்டு பிரிவுக்கான மூத்த இயக்குநர் டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபார் கூறினார்.

மேலும் 2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு என்பதால் பலருக்கும் செரண்டாவைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு தளமாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் இங்குள்ள பசுமையான சூழல், அழகும் பார்வையாளர்களைக் கவர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் மேலும் பிரபலமாகும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :