Gimik perasmian oleh Haniza Talha sempena Majlis Penyerahan Kunci Rumah Selangorku & Smart Sewa Pangsapuri Seri Utama, Taman Puchong Utama, Puchong pada 1 Disember 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

அடுத்த கட்டத்தில் 30,000 ‘சிலாங்கூர் கூ’ வீடுகள் கட்டித்தர இலக்கு !!!

பூச்சோங், டிசம்பர் 1:

இந்த ஆண்டு தொடங்கி 2023-க்குள் 30,000 ‘சிலாங்கூர் கூ’ வீடுகள் கட்டித்தர சிலாங்கூர் மாநில அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது என்று மாநில வீடமைப்பு, நகர நல்வாழ்வு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா தெரிவித்தார். கடந்த 2014 முதல் மாநில அரசாங்கம் கட்டுப்படியான வீடுகள் கட்டித் தருவதில் முனைப்பு காட்டி வருகிறது என அவர் கூறினார்.

” கடந்த நவம்பர் 15 வரை 277 கட்டுப்படியான வீடுகள் கட்டும் திட்டங்களை மாநில ஆட்சிக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் 121,695 ‘சிலாங்கூர் கூ’ வீடுகள் கட்டும் பணி முடுக்கிவிட பட்டுள்ளது. இதில், 14,781 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சாவிகள் கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் 22,274 வீடுகள் கட்டி கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு தொடங்கி 2022-க்குள் குடியேற முடியும்,” என்று ஹானிஸா உறுதி கூறினார்.

Majlis Penyerahan Kunci Rumah Selangorku & Smart Sewa Pangsapuri Seri Utama, Puchong oleh Haniza Talha pada 1 Disember 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI

Pengarang :