SELANGOR

இ-பில் கட்டண முறையில் பதிவு செய்யுங்கள்- ஆயர் சிலாங்கூர்

ஷா ஆலம், டிச.16-

பயனீட்டாளர்கள் மின்னியல் கட்டண அறிக்கையான இ-பில் முறைக்கு மாறுவதை ஆயர் சிலாங்கூர் நிர்வாகம் ஊக்குவிக்கிறது. இது காகித பயன்பாட்டைக் குறைப்பதோடு எளிமையானதும் விரைவானதும் ஆகும் என்று அது கருதுகிறது. மின் அஞ்சல் வழி அனுப்பப்படும் இ-பில்லுக்கான கட்டணத்தைப் பயனீட்டாளர்கள் எந்நேரத்திலும் எங்கிருந்த போதிலும் இணையம் வழி செலுத்தலாம் என்று அந்நிறுவனத்தின் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிஎம் மாட் சோம் கூறினார்.

இந்த இ-பில் கட்டண முறை கடந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே அமலுக்கு வந்துவிட்டத்து என்றும் இதுவரை 4 லட்சம் பயனீட்டாளர்கள் இம்முறையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

“தற்போது மேலும் 2 லட்சம் பேர் இந்த முறையைத் தேர்வு செய்வர் என்ற இலக்கை கொண்டுள்ளோம். இது நிறைவேறினால் 2020 முதல் காலாண்டில் இந்த கட்டண முறையை சுமார் 6 லட்சம் பயன்படுத்துவர்” என்று சிலாங்கூர்கினியிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :