NATIONAL

காவல்துறை, அன்வாரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்

கோலா லம்பூர், டிசம்பர் 13:

மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராகிம் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், காவல் துறையினர் நேற்று வியாழக்கிழமை அவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

புக்கிட் அமான் டி5 (வழக்கு மற்றும் சட்டப் பிரிவுஉதவி இயக்குனர் மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியதாக அது தெரிவித்துள்ளது.

அன்வார் கோலாலம்பூரின் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தில் ஒன்றரை மணி நேரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அன்வார் மாலை 3.40 மணியளவில் அங்கு வந்து மாலை 6 மணியளவில் புறப்பட்டார்.

கடந்த டிசம்பர் 7-ஆம் தேதிஅன்வாரின் முன்னாள் ஆய்வு அதிகாரி முகமட் யூசுப் ராவுத்தர் இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையில் புகார் அறிக்கையை பதிவு செய்து இரண்டு நாட்களுக்குப் பிறகு புக்கிட் அமானில் சாட்சியம் அளித்தார்.


Pengarang :