SELANGOR

சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் ஞாயிறு வரை கடும் மழை!

ஷா ஆலம், டிச.9-

சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) வரையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனக் கணிக்கப்படுகிறது. சபாக் பெர்ணம், உலு லங்காட்ம் கோம்பாக், உலு சிலாங்கூர் மற்று கோலசிலாங்கூர் ஆகியவையே அந்த ஐந்து மாவட்டங்கள் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை அதன் அதிகாரப்பூர்வ வலைத் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே மேலும் 4 நான்கு மாவட்டங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என்ற போதிலும் வரும் வியாழன் முதல் அங்கு வெப்ப நிலைக்கு மாறும் என்றும் அவ்வறிக்கை கூறியது.
சிப்பாங், கோல லங்காட், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் ஆகியவையே அந்த 4 மாவட்டங்கள் என்று அது தெரிவித்தது.


Pengarang :