SELANGOR

சிலாங்கூர் சுல்தான் பிறந்த நாள்: 19 பேருக்கு விருது

ஷா ஆலாம், டிச. 9-

நாளை புதன்கிழமை கொண்டாடப்படும் சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 74ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 19 பேர் விருது வழங்கி சிறப்பிக்கப் படவிருக்கின்றனர். இந்த விருது மற்றும் பட்டங்களுக்காக மொத்தம் 958 பேர் விண்ணப்பம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த 19 பேரில் ஒருவர் ‘டத்தோஸ்ரீ’ ‘ பட்டத்தைக் கொண்டு வரும் ஸ்ரீ படுக்கா மாக்கோத்தா சிலாங்கூர் (S. P. M. S.) விருதைப் பெறுவார் என்று சிலாங்கூர் மாநில அரசாங்க செயலாளர் டத்தோ முகமது அமின் அகமது அஹ்யா தெரிவித்தார்.
மேலும் ஒருவர் ‘டத்தோ செத்தியா ‘ பட்டத்தைக் கொண்டு வரும் டத்தோ செத்தியா – சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா (S. S. I. S) விருதைப் பெறுவார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, ஒன்பது பேர் டத்தோ பட்டத்தைக் கொண்டு வரும் டத்தோ படுக்கா மாஹ்கோத்தா சிலாங்கூர் (D. P. M. S) எனும் பட்டத்தைப் பெறுவர் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.


Pengarang :