கோலா லம்பூர், டிசம்பர் 3:
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிறப்பு பணிகளுக்கான அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கான தொடர்பு மற்றும் ஊடக ஆலோசகர் டத்தோ ஏ. காடிர் ஜாசின் கூறிய கருத்து அவரின் தனிப்பட்ட கூற்றாகும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
எல்லா தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் ஆனால் எல்லா பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பதை தாம் தான் முடிவு செய்ய வேண்டும் என பிரதமர் நினைவுறுத்தினார்.
” இது அவருடைய தனிப்பட்ட கருத்து, மலேசியாவில் எவரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக கூறலாம். இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. யாரும் தங்களது மனதில் தோன்றிய கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆனால், எனக்கு தோன்றியதை மனதோடு வைத்துக் கொள்வேன்,” என்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு பிரதமர் கூறினார்.