NATIONAL

மலேசிய செம்பனை எண்ணெய் கொள்முதல் இந்தியா அதிகரிக்கும் – துணை அமைச்சர் India dijangka tingkat pembelian minyak sawit Malaysia

கோலா லம்பூர், டிசம்பர் 11:

மலேசிய செம்பனை எண்ணெய் கொள்முதலை இந்தியா அதிகரிக்கும் என்று மூலத் தொழில் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சம்சுல் இஸ்கண்டர் இன்று மேல்சபையில் தெரிவித்தார். கடந்த அக்டோபர் மாதத்தில் சிறப்பு இறக்குமதி வரியை விதித்துள்ளதால் எண்ணெய் கொள்முதல் 60% குறைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 4-இல் இருந்து 5% பாதுகாப்பு வரியை விதித்துள்ளது மலேசிய செம்பனை எண்ணெய் ஏற்றுமதியை பாதிப்புக்கு வித்திட்டது. இன்று மேல்சபையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் இவ்வாறு பதில்  அளித்தார். செனட்டர் கேசவதாஸ் எழுப்பிய கேள்விக்கு சம்சுல் இஸ்கண்டர் இன்று விளக்கம் தந்துள்ளார்.

#பெர்னாமா


Pengarang :