NATIONAL

முக்கிய பிரமுகர்களின் மூடப்பட்ட வழக்குகள் மீண்டும் திறக்கப்படலாம்- லத்தீபா கோயா

கோலா லம்பூர், டிசம்பர் 14:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இதற்கு முன் மூடப்பட்ட பல கோப்புகளைக் குறிப்பாக செல்வாக்கு மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் திரும்பவும் பரிசீலனை செய்யக்கூடும் என எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீபா கோயா கூறினார்.

பழைய வழக்குகளைத் திரும்பவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரி பல கோரிக்கைகளை தாம் பெற்றிருப்பதாக லத்தீபா கூறினார். கடந்த ஆண்டு தொடுக்கப்பட்ட வழக்குகள்கூட கைவிடப்ப்ட்டுள்ளன.

ஆனால், அது குறித்து மேலும் விவரிக்க அவர் மறுத்தார். விவரங்களை வெளியிடுவது விசாரணைக்குத் தடையாக இருக்கும் என்று லத்தீபா கூறியது குறிப்பிடத்தக்கது.

தாம் மேற்கொண்ட வழக்குகள் தொடர்பாக விவரங்களை கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் தப்பி ஓடிவிடலாம் அல்லது கோப்புகள் காணாமல் போகும்  அபாயமும் உண்டு என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :