Azlinda Azman sebagai Timbalan Datuk Bandar yang baharu berkuat kuasa 15 Januari lalu.
PBTSELANGOR

எம்பிபிஜே துணை டத்தோ பண்டாராக அஸ்லிண்டா அஸ்மான் நியமனம்!

ஷா ஆலம், ஜன.23-

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் துணை டத்தோ பண்டாராக அஸ்லிண்டா அஸ்மான் நியமனம் செய்யப்பட்டதாக எம்பிபிஜே அறிவித்தது. இவரது நியமனம் ஜனவரி 15ஆம் தேதி அன்று நடப்புக்கு வந்தது.

இதுவரை இப்பதவியை வகித்த வந்த ஜோஹாரி அனுவார் பெட்டாலின் மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டதாக டத்தோ பண்டாராயா டத்தோ முகமது சாயுத்தி பக்கார் தெரிவித்தார். அஸ்லிண்டாவின் நியமனத்தின் மூலம் பெட்டாலின் ஜெயா மாநகராட்சியின் நிர்வாகம் மேலும் வலுப் பெறும் என்றார்.

இந்த நியமனத்தால் மக்களுக்கு மேலும் சிறந்த சேவை வழங்க இயலும் என்று எம்பிபிஜே மாதாந்திரக் கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் சாயுத்தி கூறினார். இதற்கு அஸ்லிண்டா சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவுல் துணை நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.


Pengarang :