ஷா ஆலாம், ஜன.30-
ஓரடுக்கு சுவாசக் கவசத்திற்குப் பதிலாக மூன்று அடுக்கு சுவாசக் கவசத்தைப் பயன்படுத்துமாறு சுங்கை பூலோ மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவு நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
எனினும், இது வழக்கமாக மென்மையாக இருக்கும் என்பதால் சில மணி நேரங்களில் இதனை மாற்ற வேண்டும் என்று அப்பிரிவின் ஆலோசகரான டாக்டர் பெனடிக் சிம் கூறினார்.
“பொருத்தமான சுவாசக் கருவி மூன்று அடுக்குகளைக் கொண்டதாகும். என் 95 சுவாசக் கருவி அசௌகரியமானது என்பதோடு பயனீட்டாளர்கள் சுவாசிப்பதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும்” என்று புத்ரா ஜெயாவில், சுகாதார அமைச்சில் கொரோனா வைரஸ் மீது விளக்கமளித்தபோது குறிப்பிட்டார்.
இதனிடையே, தற்போதைய கொரோனா வைரஸ் பொது மக்களை சுவாசக் கவசத்தை அணியும்படி கோரவில்லை.