SELANGOR

சிலாங்கூரின் 6 மாவட்டங்களில் செவ்வாய் வரை வெப்பநிலை நீடிக்கும்!

ஷா ஆலம், ஜன.31-

சிலாங்கூரில் உள்ள 6 மாவட்டங்களில் நாளைத் தொடங்கி வெப்ப நிலை அதிகரிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை இன்று கணிப்பு வெளியிட்டது.
சிப்பாங், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங் மற்றும் கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் வெப்ப நீடிக்கும் வேளையில், பிப்ரவரி 5ஆம் 6ஆம் தேதிகளில் இதரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவ்வறிக்கை கூறியது.

கோம்பாக் மற்றும் உலு சிலாங்கூரில் உள்ள் ஒரு சில இடங்களில் நாளைத் தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரையில் கனத்த மழை பெய்யும் என்றும் அது கணித்துள்ளது.
மாநிலத்தின் வானிலை நிலவரம் குறித்து அறிய விரும்பும் பொது மக்கள் www.met.gov.my எனும் அகப்பக்கத்தை வலம் வரலாம்.


Pengarang :