SELANGOR

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதியில் 300 மாணவர்களுக்கு உதவித் தொகை!

ஷா ஆலம், ஜன.6-

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதியில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு ‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்; திட்டத்தின் கீழ் பள்ளி செலவினத் தொகை வழங்கப்பட்டது.
இந்நிதி உதவியானது சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் (எம்பிஐ) கழகத்தின் பங்களிப்பாகும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜாவாவி அகமது முக்னி கூறினார்.

நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் குடும்பங்களின் நிதிச்சுமை குறைக்கும் இந்நடவடிக்கையானது மாநில அரசின் பரிவை வெளிப்படுத்துவதாக அவர் சொன்னார்.

“எம்பிஐ இந்த உதவித் தொக்கையை ஆண்டுதோறும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வழங்கி வருகிறது” என்றார் அவர். சுங்கை கண்டிஸ் சட்டமன்ற தொகுதியில் இந்த உதவித் தொகை புதிய பள்ளித் தவணைக் காலத்தில் 300 மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

“ஒவ்வொரு மாணவருக்கும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படுவதாகவும் இது குறைந்த வருமானம் பெறும் குடும்ப மாணவர்கள் மத்தியில் சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :