NATIONALRENCANA PILIHAN

நிழல் பொருளாதார நடவடிக்கைகளை முடக்க ரொக்கமற்ற பரிவர்த்தனை உதவும்!

ஷா ஆலம், ஜன.22-

நிழல் பொருளாதாரத்தின் ஒழுக்கமற்ற நடவடிக்கைகளைத் தவிர்க்க ரொக்கமற்ற பரிவர்த்தனை விரிவுப்படுத்தப்படுவது அவசியம் என்று பேங்க் நெகாரா பொருளாதாரத் துறையின் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் ரோஸ்லி யாக்கோப் கூறினார். இதன் வழி வரி வசூலிப்பு எளிமையாகும் என்பதோடு விபச்சாரம், கடத்தல், போதைப் பொருள் விநியோகம் மற்றும் லஞ்ச லாவண்யம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளையும் அடையாளம் காண முடியும் என்றார் அவர்.

இந்த நிழல் பொருளாதாரத்தின் மதிப்பு 300 பில்லியன் ரிங்கிட் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நேற்று அறிவித்தார்.
எனவே இந்தச் சட்ட விரோத நடவடிக்கையை முடக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சிகாணும் என்று கணிக்கப்படுகிறது.
மேம்பாடடைந்த நாடுகள் பலவற்றில் ரொக்கமற்ற பரிவர்த்தனை நடப்பில் உள்ளது. தன் வழி அனைத்து பரிவர்த்தனைகளுக்காகவும் மக்கள் தங்கள் பணத்தை வங்கியில் சேமிக்கப்பது வலியுறுத்தப்படுகிறது.

“உதாரணமாக நமது ஊதியம் வங்கி வழி செலுத்தப்படுவதா, அதற்கு வரி விதிக்கப்படுகிறது.. ஆனால் லஞ்சமானது ரொக்கமாக வழங்கப்படுவதால், அனைத்து பொருட்களையும் ரொக்கத்தைப் பயன்படுத்தி வாங்கும் சூழ்நிலை ஏற்படுவதால் அங்கு வரி தவிர்க்கப்படுகிறது. போதிய வரியை வசூலிக்காமல் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது” என்றார் லிம்..


Pengarang :