莎阿南市政厅
PBTSELANGOR

ஷா ஆலமில் வாகனமில்லா தினம் -மூன்றாமாண்டு நிறைவு விழா

ஷா ஆலம், ஜன.8-

ஷா ஆலம் வாகனமில்லா தின கொண்டாட்டத்தின் மூன்றாமாண்டு நிறைவு விழா இங்குள்ள மெர்டேக்கா சதுக்கத்தில் வரும் 12 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமிலவாயுவைக் குறைக்கும் நோக்கத்தில் ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்பிஎஸ்ஏ) மேற்கொண்ட முயற்சியே இது.

வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் கரியமிலவாயுவைக் குறைந்த அளவில் பயன்படுத்தும் மாநகராக ஷா ஆலமைத் திகழச் செய்யும் பொருட்டும் எம்பிஎஸ்ஏ இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தொழில் கழக மற்றும் பொது தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அகமது குறிப்பிட்டார்.

ஷா ஆலம் வாகனமில்லா தின கொண்டாட்டத்தையொட்டி சைக்கிளோட்டம், உடற்பயிற்சி,சுவர் ஏறுதல், கிளினிக் பிஃரிஸ்பி, நடமாடும் நூலகம், மரம் மறும் உர விற்பனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரத்தில் காலை மணி 6.30 தொடங்கி காலை 9.30 வரை பெர்சியாரான் பண்டாராயா (டத்தாரான் கெமெர்டேகாஹான்) பெர்சியாரான் பெர்பாண்டாரான், பெர்சியாரான் தாசெக், பெர்சியாரான் மஸ்ஜிட், பெர்சியாரான் டத்தோ மந்திரி, பெர்சியாரான் டாமாய் ஆகிய சாலைகள் மூடப்படும்.


Pengarang :