ஷா ஆலம், பிப்.12-
வர்த்தக கட்டடங்களுக்கு வெளியே சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்கு பெர்மீட் வெளியிடுவதற்கான பரிந்துரையை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் அங்கீகரித்துள்ளது என்று டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பாக்கார் தெரிவித்தார்.
தொழிற்துறை மற்றும் வர்த்தக கட்டடங்களுக்கு வெளியே வர்த்தகர்கள் இந்த வாகனங்களை நிறுத்துவதற்கு இந்த அங்கீகாரம் அனுமதியளித்துள்ளது என்றார் அவர். எனினும், பொது மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நடமாடுவதற்கு போதுமான அந்த ஐந்தடி பகுதிகள் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்படும் என்று அவர் விவரித்தார்.
“தொழிற்துறை பகுதியில் உள்ள வர்த்தகர்கள் தங்களின் வாகங்களை தங்கள் தொழிலிடத்திற்கு வெளியே நிறுத்துவதற்கு மாதம் ரிம.400 வாடகை விதிக்கப்படும். ஆனால்ம் வர்த்தக கட்டடங்களுக்கு வெளியே தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பெர்மிட் மட்டும் இருந்தால் போதுமானது” என்று அவர் சொன்னார்.