ஷா ஆலம், பிப்.5-
கள்ளப் படகுகள் மற்றும் ஜெட்டி பிரச்னைகளைத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிலாங்கூர் சுற்றுலா தூய்மைப்படுத்தும் திட்டம் இவ்வட்டாரத்தின் சுற்றுலா சேவை தரத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. வகுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டிகள் இவ்வட்டாரத்தில் சுற்றுலாத் துறையை பாதுகாப்பானதாக்கும் என்று கோல சிலாங்கூர் மாவட்ட மன்ற தலைவர் ரஹிலா ரஹ்மாட் தெரிவித்தார்.
சட்ட விரோதமான முறையில் செயல்படும் படகுகளும் ஜெட்டி நடத்துநர்களும் நீண்ட காலமாகவே இங்கு வரும் சுற்றுப் பயணிகளை ஏற்றிச் சென்று வருகின்றனர். உபரி வருமானத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை பாதுகாப்பு அம்சங்கள் பல கவனிக்கப்படவில்லை என்ரார் அவர்.
கடந்தாண்டு இங்கு 191,00ஒ சுற்றுப் பயணிகள் வருகை புரிந்தனர். அவர்களில் 500 முதல் 2,000 பேர் இந்த சட்ட விரோத படகு சேவைகளைப் பயன்படுத்தி ஸ்கை மீரருக்கு பயணித்தனர் என்ற விவரங்களையும் அவர் வெளியிட்டார்.
நேற்று இங்கு வருகையளித்த மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த சட்ட விரோத படகு சேவைகளால் சுற்றுப் பயணிகளின் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படக்கூடும் என்று கூறினார்.