Dato’ Seri Amirudin Shari sama-sama menikmati kemudahan Bas Smart Selangor. Foto Instagram AMIRUDIN SHARI
RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் விவேக பேருந்து: மக்களின் நலனுக்காக பயண வழிகள் அதிகரிப்பு

ஷா ஆலாம், பிப். 17-

இம்மாநில அரசாங்கம் மக்களின் நலனுக்காக பயண வழிகளை அதிகரிப்பது உட்பட சிலாங்கூர் விவேக பேருந்து திட்டத்தின் தரத்தை உயர்த்தத் திட்டமிட்டிருப்பதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷா தெரிவித்தார்.
:தற்போது இந்த விவேக பேருந்து 11 ஊராட்சி மன்றங்களில் 41 வழிகளில் பயணத்தில் ஈடுபட்டுள்ளது. 2019 ஆகஸ்டு வரை 38 லட்சம் பேர் இதில் பயணம் செய்திருப்பதாக மந்திரி பெசார் கூறினார்.

“மலேசியாவில் முதன் முறையாக சிலாங்கூர் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தை மற்ற மாநிலங்களும் தற்போது பின்பற்றத் தொடங்கியுள்ளது” இன்ஸ்தாகிராமில் குறிப்பிட்டார்.
மாநில மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியின் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டதே சிலாங்கூர் விவேக பேருந்து திட்டம்.


Pengarang :