PENDIDIKANRENCANA PILIHANSELANGOR

அனாக் சிலாங்கூர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ரிம 200 உதவித் தொகை மற்றும் இலவச உணவு

ஷா ஆலம், மார்ச் 20-

சபா மற்றும் சரவாக்கில் பயிலும் 2,500 அனாக் சிலாங்கூர் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு தலா ரிம 200 வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தை தனது தரப்பினர் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“முதலில் மாணவர்களைத் திரும்ப அழைத்துவர எண்ணிணோம் ஆனால் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் பேரில் அதற்கு பதிலாக இந்த உதவித் திட்டத்தை அறிவித்துள்ளோம்” என்றார். பல்கலைக்கழக நிர்வாகம் மூலம் உதவி வழங்கப்படுவதால், அவர்கள் ஒன்று கூடுவதற்கான அவசியம் இல்லை என்று அமிருடின் விளக்கமளித்தார்.

அதேவேளையில், யுனிசெல், குவிஸ் மற்றும் இன்பென் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் வீட்டிற்குத் திரும்பாத மாணவர்களுக்கு மார்ச் 22 தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்றார் அவர்.


Pengarang :