SELANGOR

கேடிஇபி நிர்வாகம்: திடக் கழிவு அகற்றும் அட்டவணையில் மாற்றமில்லை

ஷா ஆலம், மார்ச் 17-

திடக் கழிவு துப்புரவு மற்றும் நிர்வாக நிறுவனமான கேடிஇபி நிர்வாகத்தின் நடவடிக்கை நேரம் வழக்கம் போலவே உள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.
நிலைமை சீரடையும் வரையில் நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களின் இல்லத்தில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

லாரி ஓட்டுநர், குப்பை சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு ஊழியர்கள் ஆகியோர் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு சாதனங்களை தங்களின் பணி நேரத்தில் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட பணியாளர்கள் தங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரம்லி தெரிவித்தார்.


Pengarang :