புத்ராஜெயா, மார்ச் 29:
இன்றைய நிலவரப்படி கோவிட்-19 நோயால் ஏழு புதிய மரணங்கள் மற்றும் 150 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். கோவிட்-19 பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் இன்று பதிிவு செய்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். இது மொத்த இறப்பு எண்ணிக்கையை 34-ஆகக் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று நண்பகல் வரை 150 புதிய பாதிப்புகளையும் அவர் பதிவு செய்துள்ளார், இது மொத்த எண்ணிக்கையை 2,470ஆக உயர்த்தியுள்ளது.