Dato’Seri Amirudin Shari ditemubual media selepas Mesyuarat Agong Tahunan Persatuan Ibu Bapa Dan Guru Sekolah Rendah Agama Selayang Baru Kali Ke-16 pada 7 Mac 2020. Foto FILZAH YAMAL/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

கோவிட் -19: சிலாங்கூரில் இருவர் மரணம் மந்திரி பெசார் அனுதாபம்

ஷா ஆலாம்,மார்ச் 27-

நாட்டில் கோவிட் -19: தொற்று நோய் பரவத் தொடங்கியது முதல் சிலாங்கூரில் நேற்று முன் தினம் முதல் மற்றும் இரண்டாவது மரணச் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மரணமுற்றோரின் குடும்பத்தாருக்கு மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
“இருவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நேற்று தனது டுவீட்டரில் அமிருடின் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமானோர் கோவிட் -19 நோயால் பீடிக்கப்பட்டிருப்பதால் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பின்பற்றி நடக்கும்படி இம்மாநில மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :