SELANGOR

சிலாங்கூர் ஆறு அணைக்கட்டுகளில் தண்ணீரின் அளவு சிறப்பாக உள்ளது

ஷா ஆலம், மார்ச் 14:

சிலாங்கூரில் உள்ள 6 தண்ணீர் அணைக்கட்டுகளிலும் நீரின் அளவு சிறந்த நிலையில், அதாவது 100 விழுக்காடு நிரம்பி இருக்கின்றன என்று சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) அறிவித்தது.
சுங்கை லாபு நீர் தேக்க குளம் 99,62 % பதிவு செய்துள்ள வேளையில் தாசேக் சுபாங் நிலையம் 99.06%, சுங்கை திங்கி நிலையம் 95,23%, செமினி நிலையம் 94.57%, சுங்கை சிலாங்கூர் நிலையன் 92.44% மற்றும் லங்காட் நிலையம் 90.70 விழுக்காட்டை பதிவு செய்திரிந்தாக வாரியத்தின் அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பத்து நீர் அணைக்கட்டில் 89.08% பதிவு செய்யப்பட்ட வேளையில் கிள்ளான் கேட்ஸ் நிலையம் 87.17 % பதிவு செய்திருததது. முன்னதாக, தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் குறிப்பாக கெடா, பெர்லீஸ் ,மற்றும் பேராவில் வானிலை வெப்பமாக உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு கழகம் தெரிவித்தது.


Pengarang :