RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் ஆற்றை மாசு படுத்திய நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை- மந்திரி பெசார்

ஷா ஆலம், மார்ச் 28:

சிலாங்கூர் ஆறு மாசு படிந்த நிலையில் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடியதற்கு காரணமான பொறுப்பற்ற தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

” மாநில அரசாங்கம் தற்போது நடமாடும் கட்டுபாடு ஆணை நடவடிக்கை நடந்த போதிலும் தொடர்ந்து குடிநீர் விநியோக நடவடிக்கையை கண்காணித்து வரும்,” என்று டிவிட்டரில் இன்று  பதிவு செய்தார்.

ஆனாலும், சம்பந்தப்பட்ட நீர் விநியோக நிறுவனத்தின் துரிதமான நடவடிக்கையினால் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :