SELANGOR

சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் கோவிட்-19 நோய் நடவடிக்கை அறை திறக்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 24:

எதிர் வரும் 31 மார்ச் வரையில் பொது மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களை தீர்க்க சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் கோவிட்-19 நோய் நடவடிக்கை அறையை மாநில அரசாங்கம் தொடங்கி உள்ளதாக சிலாங்கூர் மாநில செயலாளர் அலுவலகம் அகப்பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அறை காலை 8 தொடங்கி நள்ளிரவு 12 வரை செயல்படும் என்று அதில் தெளிவுபடுத்தியது.

 

” பொது மக்கள் கீழ் வரும் தொலைபேசி எண் மூலம் எங்களை தொடர்பு கொண்டு கோவிட்-19 நோய் தொடர்பில் நிலவரங்கள் அல்லது குறைகளை கூற முடியும். தொடர்பு எண்கள்  03-55212345 / 03-55212346 / 03-55212347″ என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.


Pengarang :