Covid-19 tidak mengenal sempadan, tanpa mengira status bangsa, agama atau nilai harta anda, tambahan lagi jika anda seorang petugas kesihatan di barisan hadapan medan perang ini. Foto: Sumber Facebook Datuk Dr Noor Hisham Abdullah
NATIONALSELANGOR

தேசிய அளவில் கோவிட்-19 சம்பவங்கள் குறைந்தாலும், சிலாங்கூரின் 4 மாவட்டங்கள் அதிகமான சம்பவங்கள் !!!

ஷா ஆலம், மார்ச் 29:

சிலாங்கூர் மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் கோவிட்-19 நோயாளிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வந்துள்ள வேளையில் தேசிய அளவில் கோவிட்-19 சம்பவங்கள் கடந்த இரண்டு நாட்களில் குறைந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் அதிகாரப் பூர்வ டிவிட்டரில் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நான்கு மாவட்டங்களான பெட்டாலிங் ஜெயா 209 சம்பவங்கள், உலு லங்காட் (206), கோம்பாக் (57), மற்றும் கிள்ளான் (51) ஆகியவை சிவப்பு பகுதிகளாக அறிவிக்கப் பட்டது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், மற்றப் பகுதிகளில் நோய் பரவல் கடந்த இரண்டு நாட்களாக குறைந்த வண்ணம் இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.


Pengarang :