ஷா ஆலம், மார்ச் 28:
நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) அரசாங்கம் செயல்படுத்தும் காலகட்டத்தில் தொழில் முனைவர்கள் தங்களது வணிகத்தை மேம்படுத்த இணையத்தை பயன் படுத்தி கொள்ளலாம் என்று தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் தெரிவித்தார்.
” இந்த காலகட்டத்தில் நீங்கள் ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் (5ஜி) , தொழில் புரட்சி (4.0) மற்றும் பணம் அல்லாத பட்டுவாடா ஆகியவற்றை பயன் படுத்தலாம். புதிய தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டு உங்களது வருமானத்தை பெருக்கி கொள்ளுங்கள். இணையத்தில் இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. எல்லாமே இலவசமாக கற்றுக் கொள்ளலாம்,” என சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.