ஷா ஆலம், ஏப்ரல் 11:
உலு சிலாங்கூர் ராசா தொழில் பேட்டையில் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வந்த மறு சுழற்சி நிறுவனத்தின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிஎச்எஸ்) உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையை உறுதிப் படுத்திய எம்டிஎச்எஸ் தலைவர் சுக்ரி முகமட் அமீன், பொது மக்களின் புகாரை அடிப்படையாகக் கொண்டு மூத்த அமலாக்க உதவி அதிகாரி கைரூல் நிஸாம் முகமட் கனாபி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த அமலாக்க நடவடிக்கையில் 20 எம்டிஎச்எஸ் அதிகாரிகள், உலு சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.