ஷா ஆலம், ஏப்ரல் 1:
கோவிட்-19 நோய் தீவிரமான முறையில் பரவும் சூழ்நிலையில் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) பொது மக்களை வெளியே எந்த நடவடிக்கை மேற்கொள்ளாமல் வீட்டில் இருக்கும் நினைவுறுத்தி உள்ளது. எம்பிஎஸ்ஏ-வின் பொது உறவு மற்றும் கோப்ரட் பிரிவின் தலைவர் ஷாரின் அமாட் மாநகராட்சியின் கீழ் வாழ்ந்து வரும் பொது மக்கள் இந்நோய் தாக்குதலுக்கு எதிராக அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
” பொது மக்கள் எப்போதும் சுய சுகாதாரத்தை பேணிக் காத்து கோவிட்-19 நோய் பரவுவதை தடுக்க முடியும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.
நேற்று செத்தியா அலாமில் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றாமல் மிதிவண்டியில் பயணித்த ஒரு கும்பலின் நடவடிக்கையை கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது எம்பிஎஸ்ஏ நிர்வாகம்.