ஷா ஆலம், ஏப்ரல் 3:
சிலாங்கூர் மாநிலத்தில் நேற்றுடன் ஒப்பிடும் போது இன்று கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். நேற்று 74 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் இன்று 11 குறைந்து 63-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்பில் பொது மக்கள் நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபி) பின்பற்றி வீட்டில் இருக்கும் படி வேண்டி கேட்டுக் கொண்டார் அவர்.
” சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவரும் பிகேபி காலகட்டத்தில் அமைதியாக வீட்டில் இருங்கள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து முன்னணி வரிசையில் நமக்காக போராடும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு இறைவனை வேண்டிக் கொள்வோம். கோவிட்-19-ஐ எதிர்த்து நாம் போராடுவோம்! #சிலாங்கூர்கோவிட்19எதிர்த்துபோரிடுவோம்,” மந்திரி பெசார் தமது டிவிட்டரில் பதிவு செய்தார்.