ஷா ஆலம், ஏப்ரல் 4:
இன்றோடு கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 57 என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்று மட்டுமே 150 புதிய கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் இது வரையில் மொத்தம் 3,483 ஆகும் என்று அவர் விவரித்தார்
” 88 நோயாளிகள் சிகிச்சை மூலம் நோயிலிருந்து மீண்டனர். இதன் வழி மொத்தம் நோயிலிருந்து மீண்டவர் எண்ணிக்கை 915,” என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு அவர் பேசினார்.