ஷா ஆலம், ஏப்.3-
சிலாங்கூர் மாநில அரசு தொடங்கியுள்ள கோவிட்-19 நிதிக்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டிஎன்பி) 2 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கியுள்ளது. இதில் ஷா ஆலம் மருத்துவமனை மருத்துவ சாதனங்களுக்கு வழங்கிய 5 லட்ச ரிங்கிட் அடங்கும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இந்த உதவி நிதி வழங்கிய டின்பி நிறுவனத்திற்கு நன்றி என்று தனது டூவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் அமிருடின் குறிப்பிட்டார்.
உதவி வழங்க விரும்பும் பொது மக்கள் உட்பட நிறுவனங்களுக்கா மாநில அரசு சிலாங்கூர் கோவிட்-19 நிதியை தொடங்கியது என்றார் அவர்.
சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் நிதியை 562106684326 என்ற மேபேங்க் இஸ்லாமிக் வங்கி கணக்கு எண்ணில் மலேசிய ரிங்கிட்டாக வழங்கலாம்.