NATIONALSELANGOR

பல்கலைக் கழக மாணவர்கள் தங்களது கல்விக் கடனை திருப்பி செலுத்துவதை தாமதப்படுத்தலாம்- அமிருடின்

ஷா ஆலம், ஏப்ரல் 1:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவு மக்க  ஊக்குவிப்பு திட்டம் 2.0-ஐ அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில அரசாங்கம் வழங்கிய கல்விக் கடனை பல்கலைக் கழக மாணவர்கள் திருப்பி செலுத்துவதை தாமதப்படுத்தலாம் என்று கூறி கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சில் பால் வார்த்தார். இந்த நடவடிக்கையினால் மாநில அரசாங்கம் ரிம 6.07 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இது ஏப்ரல் 1 தொடங்கி செப்டம்பர் 30 வரை நடப்பில் இருக்கும் என மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

” மாநில அரசாங்கம் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இலவச உணவும் வழங்க உள்ளது,” என்று இன்று அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்


Pengarang :