NATIONAL

ஓரு வாகனத்தில் நான்கு பேர்கள் என்ற விதிமுறை நீக்கம்- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மே 27:

ஒரு வாகனத்தில் நால்வர் மட்டுமே என்ற விதிமுறை இன்று முதல் அகற்றப்படும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். புதிய விதிமுறையின் கீழ் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல் வாகனத்தின் அளவைப் பொறுத்து பயணிகள் செல்லலாம் என்றார் அவர்.

ஒரு தனியார் வாகனத்தில் வாகனமோட்டியுடன் 4 பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர். எம்பிபி வாகனத்தில் 7 பேர் வரை பயணம் செய்ய அனுமதி உண்டு என நேற்று இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


Pengarang :