LANGKAWI, 12 Mei — Seramai 200 daripada lebih 1,000 pendatang asing tanpa izin (PATI) Bangladesh dan Myanmar Rohingnya yang merupakan kumpulan pertama di hantar ke tanah besar melalui Bot Polis Marin di Jeti Tentera Laut Diraja Malaysia (TLDM) Langkawi hari ini. PATI itu akan ditempatkan di seluruh penempatan tahanan Imigresen di tanah besar. Penghantaran PATI itu diadakan secara berperingat-peringkat. –fotoBERNAMA (2015) HAKCIPTA TERPELIHARA.
NATIONAL

காலக்கெடு முடிந்து விட்டது; சட்ட விரோத குடியேறிகள் கைது நடவடிக்கை தொடங்கியது- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மே 31:

ஒழிந்துக் கொண்டிருக்கும் சட்ட விரோத குடியேறிகள் மீது அரசாங்கம் கைது நடவடிக்கையில் ஈடுபடும் என மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த நடவடிக்கை கோவிட்-19 நோய் பரவலை தடுக்க முயற்சிகளில் இது மிக முக்கியமான ஒன்று என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்கு முன்பு அரசாங்கம் சட்ட விரோத குடியேறிகளை தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும்படி வாய்ப்புகளை தந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

” நடமாடும் கட்டுபாடு ஆணையின் (பிகேபி) போது இவர்களை சுயமாக வந்து பரிசோதனை செய்யும்படி நானே கேட்டுக் கொண்டேன். ஆனாலும், சட்ட விரோத குடியேறிகள் இதை பொருட்படுத்தவில்லை. தற்போது கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்து விட்டது,” என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.


Pengarang :