KUALA LUMPUR, 21 Mei — Kelihatan aliran trafik di Plaza Tol Sungai Besi menghala ke selatan tanah air terkawal ekoran sekatan jalan raya ketika tinjauan fotoBernama hari ini. Menteri Kanan (Kluster Keselamatan) Datuk Seri Ismail Sabri Yaakob sebelum ini mengumumkan bahawa sekatan jalan raya di plaza tol seluruh negara telah mula dilaksanakan untuk mengelakkan perjalanan rentas negeri menjelang sambutan Aidilfitri pada Ahad ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHANSELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வெளியே செல்லும் சாலைகளில் காவல்துறை தடுப்புச் சோதனைகள் !!!

தஞ்சோங் மாலிம், மே 21:

பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து வடக்கு, தெற்கு மற்றும் கிழக்குக்கரை பகுதிகளுக்கு பயணிக்க இருப்பதாக காணமுடிகிறது என்று சிலாங்கூர் மாநில காவல்துறை துணைத் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமட் தெரிவித்தார். மாலை மூன்று மணி அளவில் இந்த நடவடிக்கை அறியப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

” ஆனாலும், பெரும்பாலான வாகனங்கள் அனுமதி கடிதங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் வணிக சம்பந்தப்பட்ட வாகனங்கள் அடங்கும்,” என்று தஞ்சோங் மாலிம் பிளஸ் தோல் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார். காவல்துறை சிலாங்கூர் மாநிலத்தை விட்டு வெளியே செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புச் சோதனைகளை சிலாங்கூர் மாநில காவல்துறை நடத்தி வருவதாக அர்ஜூனைடி முகமட் தெரிவித்தார்.

இதனிடையே, அனைத்து சாலைத் தடுப்பு சோதனைகளிலும் திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது என்றார் அவர். ” இன்று இந்த நெடுஞ்சாலையில் வெறும் 35 வாகனங்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டது. சாலை நெரிசல்கள் இன்று மிக மோசமான நிலையில் இருந்தது. இதற்கு காரணம் காவல்துறை அதிகாரிகள் மிகவும் துல்லியமான முறையில் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதே ஆகும்,” என்று அர்ஜூனைடி முகமட் விவரித்தார்.


Pengarang :