PUTRAJAYA, 7 Mei — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah bercakap semasa sidang media harian berkenaan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: இன்று 48 சம்பவங்கள், செமினியில் புதிய கிளஸ்தர் தோன்றியுள்ளது

புத்ராஜெயா, மே 23:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 48 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 4 நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் எனவும் 44 நபர்கள் உள்நாட்டு சம்பவங்கள் ஆகும். மேலும் 25 நோயாளிகள் அந்நிய நாட்டவர்கள். இன்று எந்த ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 115-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 9 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 5 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 53 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,912 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 80.5 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :