SELANGOR

கோவிட்-19: சிலாங்கூரில் மீண்டும் நோய் சம்பவங்கள் அதிகரித்துள்ளது !!!

ஷா ஆலம், மே 31:

சிலாங்கூர் மாநிலத்தில் இன்று 31 கோவிட்-19 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இது நேற்று வெறும் ஐந்தாக இருந்தது என சிலாங்கூர் மாநில நடவடிக்கை அறை தெரிவித்தது. இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 1,909 கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

” செப்பாங் மாவட்டத்தில் 24 சம்பவங்களும், கோம்பாக் மாவட்டத்தில் மொத்தம் இரண்டு சம்பவங்களும், உலு லங்காட் மற்றும் கிள்ளான் வட்டாரங்களில் தலா ஒரு சம்பவமும் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று சம்பவங்களில் இரண்டு எகிப்து நாட்டில் இருந்து திரும்பியவர்கள். மேலும் ஒருவர் ஜப்பான் நாட்டில் இருந்து வந்தவர்,” என்று தமது அறிக்கையில் அது கூறியுள்ளது.


Pengarang :