PETALING JAYA, 20 Mei — Anggota Imigresen membawa sebahagian warga asing untuk diperiksa dokumen perjalanan ketika operasi serbuan imigresen terhadap warga asing di sekitar kawasan Perintah Kawalan Pergerakan Diperketatkan (PKDP) Pasar Jalan Othman hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
SELANGOR

கோவிட்-19: சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 46 புதிய சம்பவங்கள் !!!

நேற்று மட்டும் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட கோவிட்-19 60 நோய் சம்பவங்களின் சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 46 ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது வரையில் சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 தொற்று நோய் எண்ணிக்கை 1,776 ஆக உள்ளது. இதனிடையே, கோலா லம்பூர் 1,692 சம்பவங்கள் பதிவு செய்து பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று மட்டும் 11 புதிய சம்பவங்கள் கோலா லம்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் ஆகிய நான்கு மாநிலங்களிலும் மற்றும் கிழக்குக்கரை மாகாணங்களான கிளந்தான், திரெங்கானு மற்றும் பகாங் மாநிலங்களும் நேற்று எந்த ஒரு புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை. நேற்று நண்பகல் 12 மணி வரையில் மலேசிய நாட்டில் மொத்தம் 7,245 கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :