NATIONAL

பிபிஎன் விண்ணப்பதாரர்கள் மே 30 மற்றும் மே 31 ஆகிய இரண்டு தினங்களில் மேல் முறையீடு செய்யலாம் !!!

புத்ராஜெயா, மே 29:

தேசிய பரிவு மிக்க உதவி நிதி (பிபிஎன்) விண்ணப்பம் செய்தவர்களில் நிராகரிக்கப் பட்டவர்கள் மே 30 மற்றும் மே 31, ஆகிய இரண்டு நாட்களில் உள்நாட்டு வருமான வரித்துறையிடம் (எல்எச்டிஎன்)  மேல் முறையீடு செய்யலாம் (சபா மற்றும் லாபுவான் தவிர்த்து) என எல்எச்டிஎன் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அனைத்து எல்எச்டிஎன் கிளை அலுவலகங்களும் காலை 8 மணி தொடங்கி மாலை 4 மணி வரை திறந்திருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

சபா மற்றும் லாபுவான் பிபிஎன்  விண்ணப்பதாரர்கள் ஜூன் 2-இல் மேல் முறையீடு செய்யலாம் எனவும் எல்எச்டிஎன் மேலும் கூறியது.


Pengarang :