Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari mengimamkan solat sunat Hari Raya Aidilfitri bersama ahli keluarga di Kediaman Rasmi Menteri Besar Selangor, Shah Alam pada 24 Mei 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: புதிய முறையில் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவோம்

ஷா ஆலம், மே 25:

மலேசிய மக்களை புதிய முறையில் நோன்பு பெருநாளைக் கொண்டாடும்படி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வேண்டுகோள் விடுத்தார். கடந்த காலங்களை விட மாறுபட்ட பெருநாளைக் கொண்டாடினாலும், நாம் அனைவரும் அதன் சிறப்பை உணர வேண்டும் என்று தமது டிவிட்டரில் மந்திரி பெசார் பதிவு செய்துள்ளார்.

” இந்த ஆண்டு நோன்பு பெருநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பு வாய்ந்தது. நானும் எனது குடும்பத்தினரும் ஒரு புதிய பரிணாமத்துடன் நோன்பு பெருநாளைக் கொண்டாடினோம்,” என அமிருடின் ஷாரி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அமிருடின் ஷாரி மற்றும் அவரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ மாஸ்டியானா முகமட் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும்  நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியை டிவிட்டரில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :