KUALA LUMPUR, 4 Nov — Pengarah Jabatan Siasatan dan Penguatkuasaan Trafik (JSPT) Bukit Aman Datuk Azisman Alias (kanan) bercakap pada sidang media berhubung isu basikal lajak di Ibu Pejabat Polis Bukit Aman hari ini. Polis kini sedang mengenalpasti pasti 26 lokasi tumpuan aktiviti basikal lajak di seluruh negara. Turut kelihatan Ketua Penolong Pengarah Penguatkuasaan JSPT Bukit Aman Supt Dr Bakri Zainal Abidin (kiri). –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் பயணிகளை காவல்துறை தடுத்தனர்

கோலாலம்பூர், மே 22:

நோன்பு பெருநாளை கொண்டாட எந்த மாநிலம் கடந்த பயணங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக அனைத்து சாலைத் தடைகளிலும் மாநில எல்லையைத் தாண்ட விரும்பும் அனைத்து வாகனங்கள் குறித்தும் போலீசார் முழுமையான சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, புக்கிட் அமன் போக்குவரத்து விசாரணை மற்றும் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ அஜிஸ்மான் அலியாஸ் அவ்வாறு செய்ய விரும்புவோர் தங்கள் தவறுதலாக  முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

“ மறுப்பவர்கள் திரும்பிச் செல்லும்படி கூறப்படுவார்கள். நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம், ”என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார். இப்படிப்பட்ட சில தரப்பினரால் முக்கியமான சேவை வாகனங்களுக்கான போக்குவரத்து ஓட்டத்தையும் சீர்குலைத்தது. இதுவே சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது. தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைக்கு முக்கிய பாதையாக இருக்கும் சுங்கை பெசி டோல் சாவடி, ஜலான் டுட்டா டோல் சாவடி மற்றும் கோம்பாக் டோல் சாவடி ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து கேட்டதற்கு, மூன்று டோல் சாவடிகளின் இயக்கம் இதுவரை சீராக உள்ளது என்றார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள டோல் சாவடிகளில் வெளியேறும் பாதைகளுடன் சுங்கை பெசி டோல்சாவடி, புக்கிட் மஹ்கோட்டா டோல்சாவடி மற்றும் ஸ்கூடாய் டோல்சாவடி ஆகிய இடங்களில் சாலைத் தடைகளையும் போலீசார் அமைத்துள்ளனர் என்று அவர் கூறினார். இதற்கிடையில், மாலை 6.30 மணிக்கு சுங்கை பெஸி டோல் சாவடி, ஜலான் டுட்டா டோல் சாவடி மற்றும் கோம்பாக்  தோல் சாவடி ஆகிய இடங்களில் பெர்னாமா கணக்கெடுப்புகள் படி சாலை போக்குவரத்து நன்றாக இருப்பதைக் கண்டறிந்தன. பிரதான டோல் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Pengarang :