PUTRAJAYA, 14 Mei — Ketua Pengarah Kesihatan Datuk Dr Noor Hisham Abdullah bercakap pada sidang media harian berkaitan jangkitan COVID-19 di Kementerian Kesihatan hari ini. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA PUTRAJAYA, May 14 — Health director-general Datuk Dr Noor Hisham Abdullah at the daily press conference on COVID-19 here today. –fotoBERNAMA (2020) COPYRIGHT RESERVED
NATIONALRENCANA PILIHAN

50 புதிய கோவிட்-19 சம்பவங்கள், இன்று எந்த மரணமும் பதிவு செய்யப்படவில்லை !!!

புத்ராஜெயா, மே 21:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,059 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 50 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 3 நோயாளிகள் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் எனவும் 47 நபர்கள் உள்நாட்டு சம்பவங்கள் ஆகும். இன்று எந்த  ஒரு  மரணமும் ஏற்படவில்லை. இதுவரையிலான மரண எண்ணிக்கை 114-ஆகவே உள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் 10 பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர். இவர்களில் 7 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இன்று 90 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,796 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 80.5 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.

 


Pengarang :