Sebuah restoran di Seksyen 19, Shah Alam diarah tutup serta-merta akibat ingkar Perintah Kawalan Pergerakan Bersyarat dalam Operasi Pemantauan Kedai Makan dan Restoran oleh MBSA bersama polis pada 2 Jun 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
PBTSELANGOR

எஸ்ஓபியை பின்பற்றாதது; 9 உணவகங்கள் மூடப்பட்டன- எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், ஜூன் 2:

நிபந்தனைக்குட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணையின் (பிகேபிபி) போது சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றத் தவறிய ஒன்பது உணவகங்களை ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) மூடும்படி கட்டளை பிறப்பித்துள்ளது. மொத்தம் 74 உணவகங்கள் மீது நடத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது 48 அபராத நோட்டிஸ்களை வெளியாக்கியது என எம்பிஎஸ்ஏ-இன் பொது உறவு மற்றும் தொழில்முறை பிரிவின் தலைவர் ஷாரின் அமாட் தெரிவித்தார்.

” பெரும்பாலான உணவகங்கள் சமூக இடைவெளி மற்றும் பதிவு புத்தகம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் போது, உணவக உரிமையாளர்கள் இந்த நடவடிக்கைகளை பின்பற்றவில்லை,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

இதனிடையே இந்த உணவகங்கள் சுகாதாரத்தை பேசவில்லை, செலாங்கா செயலியை பயன்படுத்தவில்லை மற்றும் சமூக இடைவெளி குறியீட்டை காட்டத் தவறியது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :