南里。
RENCANA PILIHANSELANGOR

கெடிஇபிடபள்யூஎம் புதிய செயலியை பயன்படுத்த இருக்கிறது !!!

ஷா ஆலம், ஜூலை 12:

கெடிஇபி வேஸ்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் (கெடிஇபிடபள்யூஎம்) தங்களது திடக்கழிவு துப்புரவு பணிகளின் அறிக்கையை ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்ப ஐ-கிலியர் செயலியை பயன்படுத்தும் என அதன் நிர்வாக இயக்குனர் ரம்லி முகமட் தாஹீர் தெரிவித்தார். ஐ-கிலியர் செயலியை பயன்படுத்துவதன் வழி தினசரி அலுவல்களில் காகிதங்களை பயன்பாட்டினை குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

” தினந்தோறும் எங்களது பணியின் அறிக்கைகளை ஊராட்சி மன்றங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது ஐ-கிலியர் செயலியை பயன்படுத்துவதன் வழி அறிக்கைகளை நேரடியாக அனுப்ப முடிகிறது. எதிர் வரும் காலங்களில் திடக்கழிவு நிர்வாகத்துறையில் காகிதங்கள் பயன்பாடுகள் குறைக்கப்படும். ஐ-கிலியர் பயன்படுத்துவதன் மூலம் எங்கிருந்தாலும் அறிக்கைகளை சரிபார்க்க முடியும்,” என சீனார் ஹாரியான் செய்தி வெளியிட்டுள்ளது.


Pengarang :