FILE PHOTO: A nurse wearing a protective suit works inside the coronavirus disease (COVID-19) ward at Kuala Lumpur Hospital, in Kuala Lumpur, Malaysia April 21, 2020. REUTERS/Lim Huey Teng
NATIONALRENCANA PILIHAN

கோவிட்-19: குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது , ஒரு இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது

புத்ராஜெயா, ஜூலை 31:

நம் நாட்டில் இன்று வரை கொவிட்-19 நோயால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,976 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக 12 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 7 உள்நாட்டு சம்பவங்கள் ஆகும். இன்று ஒரு  மரணம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இதுவரையிலான மரண எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா விளக்கினார்.

இன்றைய  நிலையில் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மேலும் ஒருவர் சுவாசிக்க கருவி உதவியை பெறுகிறார். மேலும், இன்று 27 பேர்கள் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,644 உயர்ந்திருக்கிறது. ஆசியான் வட்டாரத்திலே மிக அதிகமாக குணமடைந்தவர்கள் அதாவது 96.1 % இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நூர் ஹிஸாம் கூறினார்.


Pengarang :