ஷா ஆலம், ஜூலை 14:
கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்தாலும் சிலாங்கூர் வாழ் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றி நடக்க வேண்டும் என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) கூறியது. இன்று ஒரு சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, இது வரையில் மொத்தம் 2,093 சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
” சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 தொற்று நோய் சம்பவங்கள் தொடர்ந்து குறைந்து வந்தாலும் உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. சமூக இடைவெளியை அமல்படுத்துங்கள். உடல் சுகாதாரத்தை பேண வேண்டும். முகமூடிகளை அணிய வேண்டும். மேலும் செலாங்கா செயலியை பயன்படுத்துங்கள்,” என்று எஸ்திஎப்சி தமது முகநூலில் பதிவு செய்துள்ளது