NATIONAL

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட அறிவிப்பு எஸ்பிஆர்-க்கு வந்து சேர்ந்தது !!!

புத்ராஜெயா, ஜூலை 31:

சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ கடிதம் மலேசிய தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) வந்து சேர்ந்து விட்டதாக அதன் செயலாளர் இக்மால்ரூடின் ஈசாக் தெரிவித்தார். சபா மாநில அரசியலமைப்பு சட்டத்தின் 21 (4) விதியின் கீழ் சட்டமன்றம் கலைக்கப்பட்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

” இதனைத் தொடர்ந்து மலேசிய தேர்தல் ஆணையம் ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கும்,” என்று தமது அறிக்கையில் அவர் கூறினார். இந்த கூட்டத்திற்கான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.


Pengarang :