ஷா ஆலம், ஜூலை 31:
சிலாங்கூர் மாநிலத்தில் இன்று ஒரு கோவிட்-19 தொற்று நோய் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் கோவிட்-19 நடவடிக்கை அறையில் இருந்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொற்று நோய் செப்பாங் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் இதோடு இந்த பகுதியில் நான்கு நேர்மறையான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் இது வரையில் ஏழு நேர்மறையான சம்பவங்கள் ஏற்பட்டுள்ள வேளையில் உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கோம்பாக் ஆகியவை மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிதாக ஏற்பட்டுள்ள சம்பவம் உள்நாட்டினரை சம்பந்தப்படுத்தியது என உறுதிப் படுத்தியது.