ஷா ஆலம், ஜூலை 12:
மலேசிய விளையாட்டு (சுக்மா) வீரர்களை தயார் செய்ய சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (எம்எஸ்என்) மாநில அரசாங்கத்திடம் மேலும் ரிம 500,000 நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது என மாநில விளையாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் ஓத்மான் கூறினார். விளையாட்டாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அலவன்ஸ் ஆகியவற்றிற்கு இந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
” சுக்மா ஒத்திவைக்கப்பட்டதால் கண்டிப்பாக செலவீனங்கள் அதிகரிக்கும். இது நாம் அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று. இது வரையில் இந்த கூடுதல் ஒதுக்கீடு சுக்மா ஜொகூர் 2021 பயிற்சியாளர்களுக்கும் மற்றும் விளையாட்டாளர்களுக்கும் போதுமான அளவில் இருக்கும். அனைத்து விளையாட்டாளர்களும் தங்களது பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்திற்கு பிறகு கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு உடல் நிலையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார். .